மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர்.
இதையும் படிக்க- அரிசி, தானியங்களுக்கான ஜிஎஸ்டி அதிகரிப்பு: இன்றுமுதல் அமல்
பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார். போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின.
இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற பணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சிபிஎஸ்இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.