தொழில்நுட்பக் கோளாறு: அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் அயர்லாந்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து சுமார் 300 பேருடன் நேற்று தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சந்தேகிக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் அயர்லாந்தில் உள்ள ஷானனுக்குத் திருப்பி விடப்பட்டது.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஷானன் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பாதுகாப்பு நெறிமுறைகளின்படி விமானம் தற்போது விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். பிளைட் ரேடார் 24 இணையதளத் தகவலின்படி, திருப்பி விடப்படுவதற்கு முன்பு விமானம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வானில் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.