முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்

துபைக்கு இன்று காலையில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது.

Updated On : 16 மார்ச், 2026 at 4:26 AM
விமானம்
பகிர்:

துபைக்கு இன்று காலையில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது.

சென்னையில் இருந்து இன்று அதிகாலை துபைக்கு 200 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டு தரையிறங்கியது.

ஈரான் மீது தொடர்ச்சியாக அமரிக்கா, இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையல் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் துபை விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. எண்ணெய் கிடங்கு பற்றி எரியும் நிலையில் துபை விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் துபைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களையும் எமிரேட்ஸ் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதேபோல் இன்று அபுதாபி செல்லவிருந்த எத்தியாட் மற்றும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

summary

An Emirates flight that left for Dubai this morning was diverted back to Chennai.

முழு கட்டுரையைப் படிக்க →