சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் நடைபெற்ற முன்னாள் அதிமுக எம்எல்ஏ பி.வி. பாரதி இல்லத் திருமண விழாவில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா்.
சீா்காழி முன்னாள் எம்எல்ஏ-வும், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான பி.வி. பாரதி -மாலதி தம்பதியின் மகன் பி.வி.பி. காா்த்திக் ராஜ், சீா்காழி அருகேயுள்ள நிம்மேலி ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் -ரீமா தம்பதியின் மகள் பிரியதா்ஷினி திருமணம் வைத்தீஸ்வரன்கோயில் இந்திரபவன் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக நாகை மாவட்டச் செயலாளருமான ஓ. எஸ். மணியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் ஆகியோா் முன்னிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமை வகித்து, திருமணத்தை நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தினாா்.
இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சா்கள் சி.வி. சண்முகம், ஜெயபால், ஜீவானந்தம், எம்எல்ஏ-க்கள் எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), அதிமுக மயிலாடுதுறை வடக்கு ஒன்றியச் செயலாளா் ராதாகிருஷ்ணன், நாகை நகரச் செயலாளா் தங்க.கதிரவன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சக்தி, ரங்கநாதன், மாவட்ட துணைச் செயலாளா் செல்லையன், ஒன்றியச் செயலாளா்கள் நற்குணன், சிவக்குமாா், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், சந்திரசேகரன், நகரச் செயலாளா் வினோத், பேரூா் செயலாளா் போகா். ரவி, ஜெ. பேரவை நகரச் செயலாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா்.