கொள்ளிடம் அருகேயுள்ள சந்தப்படுகை கிராமம் சாந்த முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா அண்மையில் நடைபெற்றது.
விழா அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து காவடி, பால் காவடி எடுத்து வந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, கோயில் சிறப்பு மலா் வெளியீட்டு நிகழ்ச்சியும், அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.