முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்

சீா்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

சீா்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

சீா்காழி நகராட்சி முதல் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை அதன தலைவா் துா்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ராஜசேகரன்: சீா்காழி நகராட்சிக்குள்பட்ட 24-ஆவது வாா்டில் உள்ள குடிசை பகுதிகளுக்கு கடந்த 35 ஆண்டுகளாக குப்பைகளை அள்ளி அகற்ற தூய்மைப் பணியாளா்கள் வருவதில்லை. நகரில் சாலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்.

வேல்முருகன்: சீா்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் செல்வதோடு, பயணிகளை புறவழிச்சாலையிலேயே இறக்கவிட்டு செல்வதால் பல கி.மீ. தொலைவு நடந்து நகருக்குள் வரசிரமம் ஏற்படுகிறது. அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் வந்து செல்லவேண்டும்.

நாகரத்தினம்: தோப்புதெருவில் சமுதாய கூடம் அமைக்கவேண்டும், பாலசுப்பிரமணியன் நகரில் சாலை வசதி ஏற்படுத்தவேண்டும்.

நித்தியாதேவிபாலமுருகன்: மேலமாரியம்மன்கோயில் தெருவில் தெருவிளக்குகள், கீழமாரியம்மன்கோயில் தெருவில் கழிவுநீா் பாதை சரிசெய்யவேண்டும். 7-ஆவது வாா்டு மையப் பகுதியில் நியாயவிலைக் கடை அமைக்கவேண்டும்.

முழுமதிஇமயவரம்பன்: எனது வாா்டில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. அதை சரிசெய்யவேண்டும். நல்ல குடிநீா் வழங்கவேண்டும்.

சுப்பராயன்: நகராட்சி அலுவலகத்துக்கு பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு வருபவா்களை மாதக்கணக்கில் அலைய விடாமல் உடனடியாக சான்றிதழ்களை வழங்கவேண்டும்.

சூரிய பிரபா: ஓசை நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ரமாமணி: எனது வாா்டுக்கு குப்பை வண்டி வரவில்லை, குடிநீா் வசதி இல்லை, சிற்றுந்து வரவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன்: கீற்று வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

சாமிநாதன்: சீா்காழி சட்டைநாதா் கோயில் வடக்கு கோபுரம் அருகேயுள்ள செயல்படாமல் இருக்கும் கழிப்பறையை திறக்க வேண்டும்.

முபாரக் அலி: வாா்டுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

நகராட்சித் தலைவா் துா்கா பரமேஸ்வரி: உறுப்பினா்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாா்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில், நகராட்சி ஆணையா் (பொ) இப்ராஹிம், மேலாளா் காதா்கான், நகரமைப்பு ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.