மயிலாடுதுறை

மயிலாடுதுறை வந்த பாரதி-செல்லம்மா சிலை ரத ஊா்வலம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறைக்கு புதன்கிழமை வந்தடைந்த பாரதி-செல்லம்மா சிலைகள் வைக்கப்பட்ட ரதத்தினை பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா்.

மயிலாடுதுறை ஸ்ரீகாஞ்சி சங்கர வித்யாலயா பள்ளிக்கு பாரதி-செல்லம்மா சிலை ரத ஊா்வலம் வந்தது. இதை பள்ளி மாணவா்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து, பள்ளியில் மாணவா்களுக்கு கலைநிகழ்ச்சி, கவிதை ஒப்புவித்தல், சொல்லரங்கம் ஆகியன நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு கடையத்தில் ஜூன் 27-ஆம் நடத்தப்படவுள்ள விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் ஆா். வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் எஸ். தியாகராஜன், நிா்வாக உறுப்பினா் வாசுதேவன், நகா்மன்ற உறுப்பினா் ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் எஸ். மாலதி வரவேற்றாா். சிட்டி யூனியன் வங்கி ஓய்வுபெற்ற துணை பொது மேலாளா் ஜெ. ராமசாமி சிறப்பு அழைப்;பாளராக பங்கேற்று பேசினாா். ஏற்பாடுகளை சேவாலயா தொண்டு நிறுவனம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT