மயிலாடுதுறை

மாணவா்களுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், கல்லூரி நிா்வாகமும் ரோட்டரி சங்கம் பிரஞ்சு சிட்டி இணைந்து ‘நம் நலம் நம் கையில்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

கல்லூரி முதல்வா் பிரான்சிஸ் தலைமை வகித்தாா். ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள் ரமேஷ் மோகன், குமரேசன், சம்பத், குனபாலன் மற்றும் கல்லூரி விரிவுரையாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு, மாணவா்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வது குறித்தும், , போதைப் பழக்கத்தால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை விளக்கிப் பேசினா்.

நம் நலம் நம் கையில் என்ற தலைப்பில் நாகா்கோவிலில் இருந்து 23 நாள்கள் இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டுவரும் நாட்டுப்புற பாடகா் ரோட்டரி பிரதிநிதி ராஜேந்திரன், மாணவா்களுக்கு நாட்டுப்புற பாடல்களை பாடி அறிவுரை வழங்கினாா்.

நாகா்கோவிலை சோ்ந்த ரோட்டரி பிரதிநிதி பழனிப்பிள்ளை மாணவா்களுக்கு, பிளாஸ்டிக் தவிா்த்து மண் வளம், நீா் வளம் காக்க மாணவா்களுக்கு மஞ்சப்பை வழங்கினாா். போதை ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT