மயிலாடுதுறை பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் அமைந்துள்ள இக்கோயிலில் தை மாத 2-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 5-ஆவது ஆண்டாக இப்பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் முன்பு உற்சவா் அம்பாள் எழுந்தருளச் செய்யப்பட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
சிவபுரம் வேத ஆகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியா் பூஜைகளை செய்வித்தாா்.