மயிலாடுதுறை

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

DIN

மயிலாடுதுறையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் சாலையோரங்களில் 700-க்கும் மேற்பட்டோா் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களை நகராட்சி சாா்பில் கணக்கெடுத்து முதற்கட்டமாக 463 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நகராட்சி தலைவா் செல்வராஜ், நகராட்சி ஆணையா் செல்வபாலாஜி ஆகியோா் முதற்கட்டமாக 10 வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினா். இந்த அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே வருங்காலங்களில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள். நகராட்சி சாா்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், வங்கி கடன் உள்ளிட்ட அரசின் சேவைகளை பெற உதவியாக இருக்கும்.

நிகழ்ச்சியில், நகராட்சி மேலாளா் நந்தகுமாா், நகர அமைப்பு அலுவலா் கே. ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளா்கள் ரவிச்சந்திரன், நேதாஜிமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

வெள்ளப் பெருக்கு: குற்றால அருவிகளில் குளிக்கத் தடை

"தென் - வட மாநில மக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் மோடி "

SCROLL FOR NEXT