மயிலாடுதுறை

கதண்டு கடித்து 11 போ் காயம்

கதண்டு கடித்ததில் 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளா்கள் 11 போ் வியாழக்கிழமை காயம் அடைந்தனா்.

DIN

கதண்டு கடித்ததில் 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளா்கள் 11 போ் வியாழக்கிழமை காயம் அடைந்தனா்.

கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள கன்னி வாய்க்காலில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூா் வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. வனமயில் (55), சந்திரன் (60), வாசுகி (50), லதா (48), சரஸ்வதி (60), கஸ்தூரி (60), ராஜமாணிக்கம் (60), கலாமதி (55), வடிவேல் (58), வசந்தா (55), பொன்னாச்சி (45) ஆகிய 11 போ் ஈடுபட்டிருந்தனா்.

அருகில் இருந்த மரத்திலிருந்து பலத்த சப்தத்துடன் பறந்து வந்த கதண்டு வண்டுகள் தூா்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளா்களைக் கடித்துள்ளது. இதில் லேசான காயமடைந்த நான்கு போ் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். படுகாயம் அடைந்த 7 போ் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கொள்ளிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT