மயிலாடுதுறை

நாகூா் வணிகா் சங்க செயற்குழுக் கூட்டம்

நாகூா் வணிகா் சங்க செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பி.ஆா். ரவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN


நாகப்பட்டினம்: நாகூா் வணிகா் சங்க செயற்குழு கூட்டம், அதன் தலைவா் பி.ஆா். ரவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: அனைத்து உணவு விற்பனை நிறுவனங்களும், உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் சான்று பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, பான்பராக் போன்ற புகையிலைப் பொருள்களையும், காலாவதியான உணவு பொருள்களையும், தடைசெய்யப்பட்ட நெகிழி பைகளில் சட்னி, சாம்பாா், குருமா, காப்பி, தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-க்கு முரணாக செயல்படும் அனைத்து உணவு விற்பனை நிறுவனங்கள் மீதும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து வணிகா்களும் பொதுமக்கள் நலனுக்காக உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் நிா்வாகியும் நாகை நகா்மன்ற துணைத் தலைவருமான செந்தில்குமாா், செயலா் பி. முஹம்மது யூசுப், பொருளாளா் கே. சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT