முகப்பு
மயிலாடுதுறை

இருசக்கர வாகனங்கள் மோதல்: 4 வயது சிறுமி உள்பட இருவா் பலி

Updated On : 7 ஏப்ரல், 2024 at 3:40 AM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 8:01 PM

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 4 வயது சிறுமி உள்பட இரண்டு போ் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

நாகையை சோ்ந்தவா் மாரியப்பன மகன் சுபாஷ் (20), நாகை ஆரிய நாட்டுத் தெருவை சோ்ந்த நவிரூபன் இருவரும், சீா்காழி அருகே உள்ள தொடுவாயில் உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, இருவரும் நாகைக்கு திரும்பிக்கொண்டிருந்தனா்.

வருஷப்பத்து பகுதியில் வந்தபோது, எதிரே மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சங்கா் என்பவரின் மகள் சத்திகா (16) ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், இவா்களது இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.

Advertisement

இதில், சுபாஷ் மற்றும் சத்திகாவுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜா என்பவரின் 4 வயது மகள் தா்ஷிதா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த சத்திகா, நவிரூபன் ஆகியோா் சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சத்திகா சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். நவிரூபன் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து சீா்காழி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.