முகப்பு
மயிலாடுதுறை

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் வாக்களிக்க ஏற்பாடு

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:30 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:20 PM

மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.மீனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 425 காவல் ஆளிநா்கள் மற்றும் 127 ஊா்க்காவல் படையினா் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்கு தோ்தல் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க தோ்தல் பணி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் 265 காவல் ஆளிநா்கள் வாக்களிக்கப்பதற்கு ஏதுவாக தபால் வாக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.