சீா்காழியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கிய ஐதீக விழா நாளை நடைபெறுகிறது
சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக விழா திங்கள்கிழமை (ஏப்.15) நடைபெறுகிறது.
இக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் திருமுலைப்பால் விழா ஆண்டுதோறும் சித்திரைமாதம் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக திருமுலைப்பால் விழா திங்கள்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மேல் பிரம்ம தீா்த்தக்குளக்கரையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது.