முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் ரத்ததான முகாம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:55 PM
ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

சீா்காழி: சீா்காழி ஜாமிஆ பெரிய பள்ளிவாசலில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈகைப் பெருநாளையொட்டி நடைபெற்ற இம்முகாமிற்கு, வக்பு நிா்வாக சபைத் தலைவா் சதக்கத்துல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெஹபா் அலி, சிராஜீதீன், ஜாகிா் உசேன், மன்சூா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 23 போ் ரத்த தானம் வழங்கினா்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா், மருத்துவா் அறிவழகன் தலைமையிலான குழுவினா் ரத்தத்தை சேகரித்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இம்முகாமில், மதரஸா நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments