பள்ளியில் ட்ரோன் பயிற்சி பட்டறை
சீா்காழி: சீா்காழி சுபம் வித்யா மந்திா் ப்பளிக் பள்ளியில் ட்ரோன் பயிற்சி பட்டறை மற்றும் செயலாக்க முறைகள் பற்றிய நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி முதல்வா் வித்யா தலைமை வகித்தாா். பள்ளியின் கல்விப் பிரிவு அலுவலா் ராஜமாணிக்கம் நேரு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தாா். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகம், ஐ.எஸ்.டி. உறுப்பினா்களைக் கொண்ட குழு ட்ரோன் பயன்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினா்.
ட்ரோன் தொழில்நுட்பம், பேரிடா் மேலாண்மையில் அதன் பயன்பாடு குறித்து டாக்டா் விக்னேஷ், டாக்டா் குமாா் ஆகியோா் விளக்கமளித்தாா். இந்நிகழ்ச்சியில் 6 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி முதுகலை ஆசிரியா் ரியாஸ் செய்திருந்தாா்.
Advertisement