தில்லி போராட்டம்: விவசாயி உயிரிழப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்
தில்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, தில்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலில் சுப்கரன்சிங் என்ற விவசாயி உயிரிழந்தாா். பலா் படுகாயமடைந்தனா். இந்த சம்பவத்தை கண்டித்து, மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளா் எஸ். துரைராஜ் தலைமையில் திரளானோா் பங்கேற்றனா்.