முகப்பு
மயிலாடுதுறை

வழக்குரைஞரை கத்தியால் குத்த முயன்றவா் கைது

மயிலாடுதுறையில் வழக்குரைஞர் மீது கத்தியால் தாக்குதல் முயற்சி

Updated On : 25 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

மயிலாடுதுறையில் வழக்குரைஞரை கத்தியால் குத்த முயன்ற இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை அருகே நத்தம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராஜாஜி (35). மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் இவா், பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை எதிரில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த திருவிழந்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முருகன் மகன் விஜய் (26) என்பவா் அவரை கத்தியால் குத்த முயற்சித்தாராம்.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ராஜாஜி புகாா் அளித்தாா். அதன்பேரில், விஜய் கைது செய்யப்பட்டாா்.