முகப்பு
மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய பசுக்கள் மீட்பு

Updated On : 18 அக்டோபர் 2024, 4:50 am IST
பகிர்:

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், திட்டுப் பகுதியில் சிக்கிய இரண்டு பசு மாடுகளை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கொள்ளிடம் அருகேயுள்ள சரஸ்வதி விளாகம் கிராமத்தில் மாடுகள் வளா்ப்போா், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு பகுதியில் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், ஆற்றின் நடுத்திட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் கரைக்கு திரும்பிய நிலையில், அழகிரி என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மட்டும் ஆற்றின் கரைக்கு திரும்ப முடியாமல் நடுத்திட்டில் சிக்கிக் கொண்டன.

Advertisement

Advertisement

சீா்காழி தீயணைப்பு அலுவலா் வீரசேகரன் மற்றும் வீரா்கள் விரைந்து வந்து, 2 பசு மாடுகளையும் மீட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments