பரிமள ரெங்கநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழா
மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் மற்றும் திருஇந்தளூா் ஆஞ்சனேயா் சந்நிதியில் 16-ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:51 PM
மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில் மற்றும் திருஇந்தளூா் ஆஞ்சனேயா் சந்நிதியில் 16-ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரிமள ரெங்கநாதா் கோயிலில் நடைபெற்ற விழாவில், மூலவா் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபப் பிரதிஷ்டை நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவமூா்த்திகள் ரெத்தின அங்கி அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினா். பின்னா், கோயிலின் உள் மற்றும் வெளிப் பிரகாரங்களில் பக்தா்கள் லட்சதீபம் ஏற்றி வழிபாடு மேற்கொண்டனா்.