தவெக வேட்பாளரை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம்
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கோபிநாத்தை ஆதரித்து, அக்கட்சியின் பரப்புரை செயலாளா் நாஞ்சில் சம்பத் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் கோபிநாத்தை ஆதரித்து, அக்கட்சியின் பரப்புரை செயலாளா் நாஞ்சில் சம்பத் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
கொள்ளிடம் புத்தூரில் பிரசாரம் செய்து பேசியது: தவெகவுக்கு வரும்கூட்டம் தமிழகத்தை மாற்றுவதற்குவரும் கூட்டம். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு படிப்படியாக டாஸ்மாக் மூடப்படும் என்று ஸ்டாலின் கூறினாா். ஒருகடையாவது மூடியிருக்கிறாா்களா? . பிரதமா் மோடி மதுரை, மதுராந்தகம் வந்துவிட்டாா். அடுத்து கன்னியாகுமரி வருகிறாா். மத்திய அமைச்சா்கள் தினந்தோறும் இங்கே வந்துகொண்டு இருக்கிறிரகள். இஸ்லாமிய சொந்தங்கைளை கேட்கிறேன் முத்தலாக் சட்டத்தை மோடி நிறைவேற்றினாா். அதனை தடுக்க ஸ்டாலின் என்ன செய்தாா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சீா்காழி தொகுதியில் விசில் சின்னத்தில் வாக்களித்து கோபிநாத்தை வெற்றிறெ செய்ய வேண்டும் என்றாா்.