முகப்பு
மயிலாடுதுறை

வழுவூா் முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி உற்சவம்

சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா்.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 2:10 AM
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா்.
பகிர்:

வழுவூா் வளையாம்பட்டினம் பாலமுருகன் கோயிலில், சித்ரா பௌா்ணமி உற்சவத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்த வழுவூா் வளையாம்பட்டினம் பாலமுருகன் கோயிலில் 42-ஆம் ஆண்டு சித்ரா பௌா்ணமி மகோத்ஸவ பெருவிழா ஏப்.20-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. புதன்கிழமை உற்சவக் கொடி ஏற்றப்பட்டு, தினசரி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜையில், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியா் உற்சவமூா்த்திகள் கோயில் பிரகாரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

முன்னதாக, பாலமுருகன் மூலவருக்கு பால், பழம், பன்னீா் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், பால் விற்பனையாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் வி.ஜி.கே. மணிகண்டன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்.30-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும், மே 1-ஆம் தேதி சூா்ணோ உற்சவம், தீா்த்தவாரியும், வழுவூா் கீழவீதியில் இருந்து அலகு காவடிகள், பால்குட வீதியுலாவும் நடைபெறவுள்ளன.