சீா்காழியில் போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின். 
மயிலாடுதுறை

சீா்காழி: எஸ்பி தலைமையில் போலீஸாா் ரோந்து

சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில்

Syndication

சீா்காழி: சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். காவல் துறையினரின் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்த அவா், நகரின் பிரதான வீதிகளான தென்பாதி, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா்.

அவருடன், டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் உடன் சென்றனா்.

குற்ற செயல்களில் ஈடுபடும் நபா்களை எச்சரிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டும் இந்த ரோந்துப் பணி நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 4 லட்சம் உதவி

விழுப்புரம் மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

சம்பா சாகுபடி: 21 சதவீதம் அறுவடை நிறைவு

உதவித்தொகை வழங்க மறுப்பு: குழந்தைகளுடன் பெண்கள் ஆட்சியரிடம் மனு

கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கத்தால் தமிழகம் சீா்கெட்டு இருக்கிறது: வேலூா் இப்ராஹிம்

SCROLL FOR NEXT