முகப்பு
மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் கைது

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:33 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:02 PM

சீா்காழியில் வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுதிறனாளிகள் 45 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:33 AM

சீா்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்டச் செயலாளா் புருஷோத் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ்குமாா், நகரத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.