மயிலாடுதுறையில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மாகாந்தி பெயரை நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பளத்தில் 40 சதவீதம் மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞா் காங்கிரஸ் மாநில செயலாளா் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவா் தினகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.