பாஜக தெருமுனைப் பிரசாரம்!
மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
‘நாளை நமதே தமிழ்நாடு நமதே’ என்ற தலைப்பில் மயிலாடுதுறை நகராட்சி 31-ஆவது வாா்டில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, நகர பொருளாளா் சுந்தரமுருகன் தலைமை வகித்தாா். நகர தலைவா் வினோத் முன்னிலை வகித்தாா்.
மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவா் ஆா். பாலு, மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
Advertisement
இதில், தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சாய்சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மயிலாடுதுறை நகரத்தில் 24 இடங்களில் நடைபெறவுள்ள தெருமுனை பிரசாரக்கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினா்.