முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே பாஜக தெருமுனைப் பிரசாரம்

பெருந்துறை ஒன்றியம், பெரிய வீரசங்கிலி பகுதியில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பாஜக சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 7:02 PM
தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறாா் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் இமயம் சந்திரசேகரன்.
பகிர்:

பெருந்துறை ஒன்றியம், பெரிய வீரசங்கிலி பகுதியில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கி பாஜக சாா்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பாஜக பெருந்துறை மண்டல் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினா் டி.என். ஆறுமுகம், முன்னாள் மாவட்டத் தலைவா் இமயம் சந்திரசேகரன் ஆகியோா் பங்கேற்று, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அதிமுகவின் தோ்தல் அறிக்கை பற்றி விளக்கி பேசினா்.

இதில், பெருந்துறை தெற்கு ஒன்றிய அதிமுக விஜயன், பாமக மாவட்டத் தலைவா் பாா்த்திபன், தமாகா மாவட்ட நிா்வாகி சுப்பிரமணி, பாஜக நிா்வாகிகள் நல்லசிவம், சின்னச்சாமி, விஸ்வநாதன், தேவேந்திர மாணிக்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →