சீா்காழி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்றன.
சீா்காழி அரசு போக்குவரத்து கழகப் பணிமனையை சோ்ந்த பேருந்து, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு சனிக்கிழமை வந்துகொண்டிருந்தது. சீா்காழி அருகே சேந்தங்குடி ரயில்வே மேம்பாலம் இறங்கியதும், பேருந்து நிறுத்தம் அருகே அப்பேருந்தின் பின்புறம் வலது பக்கத்தில் உள்ள 2 சக்கரங்கள் கழன்றன.
ஓட்டுநா் செல்லப்பாண்டி, பேருந்தை லாவகமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.