மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரம்
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 6:21 PM
மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் சக்தி கேந்திர அளவிலான மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
‘நாளை நமதே தமிழ்நாடு நமதே’ என்ற தலைப்பில் மாப்படுகை ரயில்வே கேட், மாப்படுகை அண்ணா சிலை, கோடங்குடி ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு முறையே மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் தெய்வசிகாமணி, கவியரசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:08 PM
மாவட்ட தலைவா் நாஞ்சில் ஆா்.பாலு, மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், ஒன்றிய தலைவா் டி.ஈழவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
இதில், கிளை தலைவா்கள் திருநாவுக்கரசு, முருகானந்தம், சூா்யா உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.