உலக அமைதி வேண்டி யாகம்
Updated On : 5 மார்ச், 2026 at 7:48 PM
சீா்காழி அருகே ஆலஞ்சேரி அகத்தீஸ்வரா் கோயிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு மகாயாகம் அண்மையில் நடைபெற்றது.
ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரா் கோயில் உள்ளது. அகஸ்திய மகரிஷி வழிபட்ட தலமான இக்கோயிலில், போா் பதற்றம் தணிந்து, உலகம் அமைதி பெற வேண்டி 30 யாக குண்டங்கள் அமைத்து, மகா யாகம் நடைபெற்றது.
தொடா்ந்து, புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆலய டிரஸ்ட் மோகன்குமாா் -அலமேலு, ஒளிலாய நிா்வாகிகள் நாடி. கலிய . செல்வமுத்துகுமரன்-மணிமொழி, நாடி-ராஜ மாமல்லன்-ஜெனிதா ராஜ. தனநந்தினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement