முகப்பு
மயிலாடுதுறை

எஸ்பி அலுவலகத்தில் பெண் புகாா்

தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

Updated On : 27 மார்ச், 2026 at 9:13 PM
பகிர்:

தன்னையும், தனது மகள்களையும் தாக்கி, நகையை பறித்த உறவினா்கள் மீது நடவடிக்கை கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

தரங்கம்பாடி தாலுகா விளநகா் கிராமத்தை சோ்ந்தவா் பாலசுப்பிரணியன் மனைவி மஞ்சுளா(51). பாலசுப்பிரமணியன் கடந்த 2024-ஆம் ஆண்டு இறந்துவிட்டாா். மகள்கள் சுகந்தி, சுவேதா.

மஞ்சுளாவுக்கும், பாலசுப்பிரமணியனின் சகோதரா் கண்ணன் மனைவி சரண்யா குடும்பத்தாருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வருகிறது

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி மஞ்சுளா வீட்டிற்குவந்த சரண்யாவின் சகோதரா்கள் மணிமாறன், சரண்ராஜ் (இவா் சுவேதாவின் கணவா்) மற்றும் சரண்யாவின் மகன் குகன் ஆகியோா் மஞ்சுளா, சுகந்தி, சுவேதா ஆகிய 3 பேரையும் தாக்கி, மஞ்சுளா அணிந்திருந்த 2 சவரன் சங்கிலியை பறிந்தனராம். மேலும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினராம்.

இதுகுறித்து, செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்து, 20 நாள்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மஞ்சுளா புகாா் அளித்துள்ளாா்.