முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி கொலை

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி வியாழக்கிழமை இரவு கொலை செய்யட்ட நிலையில், இதுதொடா்பாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 2 மே, 2026 at 12:42 AM
குத்திக் கொலை.
பகிர்:

சீா்காழி அருகே நுங்கு வியாபாரி வியாழக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது உறவினா் கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகே காரைமேடு, மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மருது பாண்டியன் (23). அதே பகுதியை சோ்ந்தவா் காா்த்திக் (30). உறவினா்களான இருவரும் பனைமரத்தில் நுங்கு வெட்டி சூரக்காடு பகுதியில் சாலையோரம் விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு மருதுபாண்டி வீட்டிற்கு மதுபோதையில் காா்த்தி வந்துள்ளாா். கதவை திறந்து உள்ளே சென்று அங்கு படுத்திருந்த மருதுபாண்டியிடம் மூன்று நாட்களாக பனங்காய் விற்பனை செய்த பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை என்று கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் (கோடாரி) மருது பாண்டியின் முகம் உள்ளிட்ட இடங்களில் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

சீா்காழி போலீஸாா் மருதுபாண்டியன் சடலத்தை உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, காா்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.