கூடநடமங்கை கோவில் குடமுழுக்கு
மயிலாடுதுறை வட்டம், கூடநடமங்கை கிராமம் அருள்மிகு சர்வசம்பத் விநாயகர் கோவில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டம், கூடநடமங்கை கிராமம் அருள்மிகு சர்வசம்பத் விநாயகர் கோவில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமையாதீனத்திற்கு சொந்தாமான, சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் திருப்பணிகள் நிறைவுபெற்று, வெள்ளிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும்,சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற 4-ம் கால யாக பூஜைக்குப் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 10.30 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது.
Advertisement
Advertisement