நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் ஓலை சப்பர பவனி
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவ சப்பர பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவ சப்பர பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பிரம்மோத்சவம் கடந்த 3-ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. திருவிழா கொடியேற்றம் மே 4-ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, தினமும் வெவ்வேறு வாகனங்களில், வெவ்வேறு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு வசந்த உத்சவம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையொட்டி, அம்பாள் மகாலெட்சுமி அலங்காரத்தில் சின்ன யானை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை இரவு ஓலை சப்பர பவனி நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் அம்பாள் ஓலை சப்பரத்தில் காட்சியளித்தார். பாரம்பரிய முறைப்படி, வழக்கமான வீதிகளில் ஓலை சப்பரம் வலம் வந்து நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
செடில் உத்சவம்: பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் விழா மற்றும் செடில் உத்சவம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டமும், மாலையில் செடில் உத்சவமும் நடைபெறுகிறது.