நாகப்பட்டினம்

அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : 
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் சான்றோர்களில் சிறந்தவர்களுக்கு, ஆண்டு தோறும் திருவள்ளுவர் தினத்தன்று  அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. 
இந்த விருதுக்குத் தகுதியானவர்கள், நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அல்லது மயிலாடுதுறை, சீர்காழி ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியரைத் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆதார ஆவணங்களை இணைத்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்துக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT