நாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேன் மோதியதில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள குரங்குப்புத்தூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மனைவி மலர்கொடி (50). இவர், சனிக்கிழமை அப்பகுதியில், சாலையோரத்தில் நின்றுகொண்டு முக்குரும்பூர் பகுதியைச் சேர்ந்த உறவினர் மணிகண்டனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த வேன் இருவர் மீதும் மோதியது. இதில் மலர்கொடி நிகழ்விடத்திலேயே இறந்தார். காயமடைந்த மணிகண்டன் தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.