நாகப்பட்டினம்

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

DIN

மயிலாடுதுறை அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகேயுள்ள கூறைநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் (26), சேட்டு (30). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். மேலும் போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்களாம்.
இதையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT