மயிலாடுதுறை அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை அருகேயுள்ள கூறைநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் (26), சேட்டு (30). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். மேலும் போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்களாம்.
இதையடுத்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பரிந்துரையின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.