நாகப்பட்டினம்

சர்வதேச கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

DIN

பள்ளிகளுக்கு இடையேயான சர்வதேச கடற்கரை கைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டு தெரிவித்தார்.
பள்ளிகளுக்கு இடையேயான சர்வதேச கடற்கரை கைப்பந்து போட்டி பிரெஞ்சு நாட்டில் பாலினேஷியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், 16 வயதுக்குள்பட்டோர் பிரிவில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஆர். ராபின் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 18 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மாணவர் அகிலன் நான்காம் இடம் பெற்றார்.
இந்த 2 மாணவர்களையும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், இருவருக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. கஸ்தூரிபாய், நாகை மாவட்ட உடற்கல்வி ஆய்வர் சாந்தி, பயிற்சியாளர்கள் கண்ணன், கலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT