நாகப்பட்டினம்

மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தல்

DIN

நாகப்பட்டினத்தில் அமையவுள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தை மயிலாடுதுறையில்  அமைக்க உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம், அதன் தலைவர் வேலு. குபேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டத்தை அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகை மாவட்ட தலைநகரான நாகையில் அமையவுள்ள  மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தை  வழக்காடிகள் மற்றும் வழக்குரைஞர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் என். பாலாஜி, வழக்குரைஞர் வி.எஸ். பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT