மணல்மேடு அருகே வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்த 5 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆத்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, சாலையில் வருவோரிடம் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, மயிலாடுதுறை வட்டம், காருகுடி தெற்குத்தெரு கு. ஐயப்பன்(31), கடலங்குடி பிரதான சாலை பகுதி பூ. திருமாறன்(48), மேலப்பனையூர் ஆற்றங்கரைத் தெரு கோ. ரமேஷ் (46), அகரகீரங்குடி கோ. விக்னேஷ் (23), பா. சார்லஸ் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.