நாகப்பட்டினம்

லாரி - பேருந்து மோதல்: ஒருவர் காயம்

DIN

சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானாவில் வியாழக்கிழமை காலை லாரியும், அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டத்தில் ஒருவர் காயமடைந்தார்.
காரைக்காலிருந்து சிதம்பரம் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானாவில் திரும்பும்போது, சீர்காழி புறவழிச்சாலையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்ற லாரி, பேருந்தின் பின்புற பக்கவாட்டில்  மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ரவுண்டானா தடுப்புக் கம்பியில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் காயமடைந்து, சீர்காழி அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். இந்த விபத்தால்,  சீர்காழி - மயிலாடுதுறை - நாகப்பட்டினம்  சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT