நாகூர் அருகே இளைஞர் மர்ம சாவு
நாகூர் அருகே தீபாவளி தினத்தில் காணாமல் போனவர் காயங்களுடன், மர்மமான முறையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
நாகூர் அருகே தீபாவளி தினத்தில் காணாமல் போனவர் காயங்களுடன், மர்மமான முறையில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டார்.
நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (19). இவர் தீபாவளி தினத்தில் வெளியே சென்றவர் வீட்டுக்கு வர வில்லையாம். இந்நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள தங்கச்சி மண்டப குளத்தில் நிர்வாணமாக காயங்களுடன் இறந்து கிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்த நாகூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.