நாகப்பட்டினம்

இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

சீர்காழியில் சிட்டி யூனியன் வங்கி சார்பில், வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அண்மையில் நடைபெற்றது.
சிட்டி யூனியன் வங்கி சீர்காழி கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கிளை மேலாளர் வி. ஜெய்கணேஷ் தலைமை வகித்தார். உதவி மேலாளர் ஏ. உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு கும்பகோணம் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் சுவாமிநாதன் தலைமையில், மருத்துவ நிபுணர்கள் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்நீர் அழுத்த நோய் உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கினர். மேலும், கண் கண்ணாடி தேவைப்படுபவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இதில் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

SCROLL FOR NEXT