மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி
உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் செயல்படும் சேவை சங்கங்களின் சார்பில் தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறையில் செயல்படும் சேவை சங்கங்களின் சார்பில் தூய்மைப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற தூய்மைப் பணிக்கு, இம்மருத்துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். குடிமுறை மருத்துவ அலுவலர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் ஏஆர்சி என். விசுவநாதன் தூய்மைத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசனத் தலைவர் வி. ராமன், தொழிலதிபர் ஜெனிபர் எஸ். பவுல்ராஜ் மற்றும் ஜேசீஸ், ரோட்டரி சங்கம் ,பீக்காக் வாக்கர்ஸ் சங்க நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.