சீர்காழி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சிவராத்திரியையொட்டி, திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவையொட்டி, நாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், ஈசானியத் தெரு சௌந்தரநாயகி அம்மன் உடனாகிய அக்னீபுரீஸ்வரர் சுவாமி கோயில், அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனாகிய அண்ட நாதீஸ்வரர்சுவாமி கோயில், சோளபுரீஸ்வரர் சுவாமி கோயில், திருக்கோலக்கா ஓசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வவரர் சுவாமி கோயில், நாகேஸ்வரமுடையார் கோயில், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமிகோயில் ஆகிய கோயில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், மலைமீதுள்ள தோணியப்பர் சமேத உமாமகேஸ்வரிஅம்மனுக்கு தைலக்காப்பு வழிபாடு நடைபெற்றது.