நாகப்பட்டினம்

சீர்காழி கோயில்களில் சிவராத்திரி விழா

DIN

சீர்காழி பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் சிவராத்திரியையொட்டி, திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 
விழாவையொட்டி, நாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல், ஈசானியத் தெரு சௌந்தரநாயகி அம்மன் உடனாகிய அக்னீபுரீஸ்வரர் சுவாமி கோயில், அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனாகிய அண்ட நாதீஸ்வரர்சுவாமி கோயில், சோளபுரீஸ்வரர் சுவாமி கோயில், திருக்கோலக்கா ஓசைநாயகி அம்மன் உடனாகிய தாளபுரீஸ்வவரர் சுவாமி கோயில், நாகேஸ்வரமுடையார் கோயில், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமிகோயில் ஆகிய கோயில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், மலைமீதுள்ள தோணியப்பர் சமேத உமாமகேஸ்வரிஅம்மனுக்கு தைலக்காப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT