வேதாரண்யம் - வாய்மேடு சாலையில் பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை
நாகை மாவட்டம், வேதாரண்யம் - வாய்மேடு நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் அளவில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் - வாய்மேடு நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் அளவில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம் - வாய்மேடு (திருத்துறைப்பூண்டி) பிரதான சாலையானது மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தொடர் மழையின்போது இந்த சாலையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தார்ச் சாலை உறுதித்தன்மையை இழந்தது. இதனால் ஏற்பட்ட பள்ளங்கள் இதுநாள் வரை முறையாக சீரமைக்கப்படவில்லை. ஆனால், தார்ச் சாலையை சீரமைக்க ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணிகளை மேற்கொள்ளும் காலம் வரை காத்திருக்காமல், ஆபத்தான பள்ளங்களையாவது தாற்காலிகமான முறையிலாவது சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.