டாஸ்மாக் பார்களில் ஆய்வு
நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
நாகை நகராட்சியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் பார்களை உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் ஆய்வு செய்து கூறியது: தயாரித்து விற்பனை செய்யப்படும் உணவு வகைகளை தூசி மற்றும் ஈக்கள் நெருங்காதவாறு, பாதுகாப்பாக வைத்து விற்பனை செய்ய வேண்டும், உணவுப் பரிமாறும் பகுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும், தயாரிப்பு விவரமில்லாத தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை விற்பனை செய்யக் கூடாது.
உணவை கையாள்பவர்கள் தன்சுத்தத்தை பராமரிக்க வேண்டும், பார்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் காலாவதியற்றதா என கண்காணித்து விற்பனை செய்ய வேண்டும், இந்த உணவுப் பாதுகாப்பு விதமுறைகளை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நாகப்பட்டினத்தில் 2, வெளிப்பாளையத்தில் 2 என மொத்தம் 4 பார்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.