முகப்பு
நாகப்பட்டினம்

பணி ஓய்வு பாராட்டு விழா

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 மார்ச், 2018 at 9:31 AM
பகிர்:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஜான்சி கேத்ரினா பணி ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்குப் பாராட்டு விழா ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ
ராட்சிகள்) ரெஜினாராணி, ஒன்றியப் பொறியாளர்கள் கனகராஜ், முத்துக்குமார், மேலாளர் சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டப் பேரவை  உறுப்பினர் பி.வி. பாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து ஜான்சிகேத்ரினா ஏற்புரை வழங்கினார். பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் போகர் சி. ரவி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஏவி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.