பழுதான சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
சீர்காழி அருகே கடந்த 4 ஆண்டுகளாகப் பழுதடைந்த சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகே கடந்த 4 ஆண்டுகளாகப் பழுதடைந்த சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி அருகேயுள்ள மாதிரவேளூர் கிராமத்திலிருந்து பாலுரான்படுகை, பட்டியமேடு, உச்சிமேடு, பனங்காட்டாங்குடி மற்றும் வடரெங்கத்துக்குச் செல்லும் சாலை 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தடுமாறிக் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த தார்ச் சாலை மேம்படுத்தப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதைச் சீரமைக்குமாறு பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் காமராஜ் வலியுறுத்தினார்.